பிரதமர் மோடியின் 72-வது பிறந்தநாளையொட்டி நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு 8 சீட்டாக்கள் கொண்டுவரப்பட்டது. நமிபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சிறுத்தைகளை மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் இன்று திறந்து விட்ட பிரதமர், அதனை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். மேலும் இதுகுறித்து அவர் பேசியபோது, சீட்டாக்களை மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்யும் திட்டத்திற்கு உதவிய நமீபியா அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உலகில் வேகமாக ஓடக்கூடிய இந்த சீட்டாக்களை பார்ப்பதற்கு மக்கள் இன்னும் கொஞ்ச காலம் பொறுமையாக காத்திருக்க வேண்டும் எனக் கூறினார்.