ஈரோடு, மே 6: ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் பல்வேறு பன்னாட்டு, தேசிய அளவிளான நிறுவனங்கள் மூலமாக வேலைவாய்ப்பு பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா ‘வேலைவாய்ப்பு தினம்’ என்ற தலைப்பில் நடைபெற்றது. விழாவுக்கு, ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் சண்முகன் தலைமை தாங்கி, பேசினார். ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலாளர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளர் திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.