நத்தவெளி இணைப்பு சாலையில் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

 

கடலூர், அக். 9: கடலூர் நத்தவெளி இணைப்பு சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நத்தவெளி இணைப்பு சாலையில் குடிமைபொருள், வழங்கல் குற்ற புலனாய்வு துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று காலை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி ஒன்று திடீரென எரிய தொடங்கியது.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக கடலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். லாரி தானாக தீப்பிடித்து எரிந்ததா அல்லது அருகில் உள்ள குப்பையில் இருந்து தீ பட்டு எரிந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை