சென்னை: பணப்பட்டுவாடா செய்ததாக அதிமுக வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன் மீதான புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ? என்பது குறித்து திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டு உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார். காட்டுவேலாம்பட்டியில் நடந்த கூட்டத்தில் ஆரத்தி எடுத்தவர்களுக்கு தட்டில் பணம் போட்டதாக வீடியோ ஆதாரத்துடன் போலீசில் புகார் தெரிவித்திருந்தார். தேர்தல் அதிகாரி புகாரின் பேரில் நத்தம் விஸ்வநாதன் மீது கிழ்நத்தம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….