நத்தம் பேரூராட்சி மன்ற கூட்டம் 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்

 

நத்தம், அக். 1: நத்தம் பேரூராட்சி மன்றத்தின் சாதாரண கூட்டம் நடந்தது. மன்ற தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா தலைமை வகித்தார். துணை தலைவர் மகேஸ்வரி சரவணன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் விஜயநாத் வரவேற்றார். தலைமை எழுத்தர் பிரசாத் அறிக்கை வாசித்தார்.

கூட்டத்தில் காந்திநகர், அய்யாபட்டி பகுதிகளில் தலா ரூ.5 லட்சம் மதிப்பில் வடிகால் அமைக்கும் பணி, அய்யாபட்டியில் ரூ.10 லட்சம் மதிப்பில் சமுதாய கூடம் பராமரிப்பு பணி செய்வது உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் தூய்மை பணி ஆய்வாளர் செல்வி சித்ரா மேரி மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

விழுப்புரம் அருகே பரபரப்பு திருமணமான 4 மாதத்தில் விவாகரத்து வரன் பார்த்தவருக்கு சரமாரி அடி உதை மாப்பிள்ளை மீது போலீஸ் வழக்குப்பதிவு

டாஸ்மாக் கடையை உடைத்து பணம், மது பாட்டில்கள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை

மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிப்பதை தடுக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் நாராயணசாமி பரபரப்பு பேட்டி