நத்தம் அருகே பாலத்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

நத்தம், மார்ச் 28: நத்தம் அருகே சிறுகுடி பிலாமரத்துப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (31). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலையில் தனது வீட்டின் அருகேயுள்ள தரைப்பாலத்தில் அமர்ந்திருந்தார். அப்போது அவர் எதிர்பாராதமாக கால் இடறி பாலத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த சுப்பிரமணி சம்பவ இடத்திலே பலியானார். இதுகுறித்த புகாரில் நத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை