நத்தம், ஜூன் 29: நத்தம் அருகே ஆவிச்சிபட்டியில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இப்பகுதியில் அடிப்பகுதி சேதமடைந்த நிலையில் மின்கம்பம் ஒன்று இருந்தது. நேற்று முன்தினம் மின்கம்பம் அருகே செல்லையா என்பவருக்கு சொந்தமான வயலில் நெல் அறுவடை பணி நடந்தது. இதில் பெண்கள் உள்பட 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென சேதமடைந்த மின்கம்பம் சாய்ந்தது. இதை கண்ட தொழிலாளர்கள் அலறியடித்து ஓடி விட்டனர். இதனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மின்வாரிய துறை அதிகாரிகள் சேதமடைந்த கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நத்தம் அருகே நெல் அறுவடையின் போது வயலில் திடீரென சாய்ந்த மின்கம்பம்
previous post