நத்தம், ஜூலை 19: நத்தம் அருகே குடகிப்பட்டி பகுதியில் அனுமதியின்றி சேவல் சண்டை நடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நத்தம் எஸ்ஐ விஜயபாண்டியன் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது குடகிப்பட்டி கருப்பு கோயில் பகுதியில் சேவல்களை வைத்து சண்டை நடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அக்கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் குடகிப்பட்டியை சேர்ந்த ரஞ்சித் (23), செங்குளத்தை சேர்ந்த மணிகண்டன் (32), செந்துறையை சேர்ந்த சக்தி (26), நேசன் (20), குரும்பபட்டியை சேர்ந்த தயாநிதி (26), சுரக்காபட்டியை சேர்ந்த சிவபெருமான் (25), வடமதுரையை சேர்ந்த பொன்ராஜ் என்பது தெரியந்தது. இதையடுத்து போலீசார் 7 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூ.200 பணத்தை பறிமுதல் செய்தனர்.