நடைபாதை அமைக்கும் பணி மந்தம்

 

பந்தலூர், ஜூலை 5: பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சி 11ம் வார்டு சேரம்பாடி சுங்கம் குஞ்ஞாரகுன்னு பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு செல்லும் நடைபாதை சேரங்கோடு ஊராட்சி சார்பில் காங்கிரீட் நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்றது.

இதில் இடைப்பட்ட பகுதியில் சுமார் 30 மீட்டர் தூரம் நடைபாதை அமைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழைக்காலம் என்பதால் சேறும் சகதியுமாக மாறியுள்ள நடைபாதையில் நடந்து செல்லமுடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே சேரங்கோடு ஊராட்சி நிர்வாகம் கிடப்பில் போடப்பட்டுள்ள நடைபாதையை காங்கிரீட் நடைபாதையாக அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை