நடைபயிற்சி சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

 

பூந்தமல்லி: வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 31 வயது பெண், கடந்த 8ம் தேதி வில்லிவாக்கம், மண்ணடி பார்கத் தெருவில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த ஒருவர், இளம்பெண்ணை வழிமறித்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வில்லிவாக்கம் போலீசில் அந்த பெண் புகார் கொடுத்தார். புகாரின்படி போலீசார், அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரித்தனர். அதில், வில்லிவாக்கம், தாந்தோணி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த குணசேகர் (42) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த புதிய முப்பெரும் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர் அரசு கல்லூரியில் 3ம் கட்ட கலந்தாய்வில் 131 மாணவர்கள் சேர்க்கை

மக்கள்குறைதீர் கூட்டத்தில் 548 மனுக்கள் மாயனூரில் இருந்து தென்கரை வாய்க்காலில் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரில் சாயக்கழிவுநீர் கலப்பா?