புதுடெல்லி: பாலிவுட் நடிகை சோனம் கபூரின் வீட்டில் ரூ.2.4 கோடி மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்த நர்ஸ் மற்றும் அவரது கணவரை டெல்லி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, பாலிவுட் நடிகை சோனம் கபூரின் கணவர் ஆனந்த் அகுஜாவின் டெல்லி வீட்டில் இருந்து ரூ.2.4 கோடி நகை, பணம் கொள்ளை போனது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த வீட்டில் பணி செய்து வரும் 20 வேலைக்காரர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அங்கே நர்சாக வேலை பார்த்து வந்த அபர்ணா ரூத் வில்சன் (31) என்பவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது சோனம் கபூரின் வீட்டில் கொள்ளையடித்ததை அபர்ணா ரூத் வில்சன் ஒப்புக்கொண்டார். அதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த கொள்ளை சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த நர்சின் கணவர் நரேஷ் குமார் சாகரையும் போலீசார் கைது செய்தனர். ஆனால் கொள்ளை போன நகை மற்றும் பணத்தை இன்னும் மீட்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்….
நடிகையின் வீட்டில் ரூ.2.4 கோடி கொள்ளையடித்த நர்ஸ் கைது
previous post