நடிகர் சூர்யா மீது பாமக புகார்

சென்னை: ஜெய் பீம் திரைப்படம் விவகாரத்தில், இயக்குநர் ஞானவேல். நடிகர் சூர்யா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாமக மாநில துணைப்பொதுச்செயலாளர் வெங்கடேசன் தலைமையில் பசுமை தாயகம் மாநில துணை செயலாளர் குரோம்பேட்டை கண்ணன், மாநில துணை செயலாளர்கள் பட்டு பாண்டியன், தட்சிணாமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் ஜேஎம் சேகர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பாமகவினர் பரங்கிமலை இணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘‘சூர்யா நடித்து வெளிவந்துள்ள ஜெய்பீம் திரைப்படம் வன்னியர்,  இருளர் சமுதாயத்தினர் இடையே கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது. மேலும் வன்னியர் சமுதாய தலைவர்களைப்பற்றி அவதூறாக படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனால் வன்னிய சமுதாயத்தை சேர்ந்த தொழில் புரிவோருக்கு மற்ற சமுதாயத்தின் இடையே இணக்கமாக செயல்பட முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் தொழில் பாதிப்பு ஏற்படுகிறது. இதில் நடித்த நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல், தயாரிப்பாளர் ஜோதிகா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கச்வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்