நடிகருடன் காருக்குள் சிக்கிய நடிகை: தலைமுடியை இழுத்து போட்டு தாக்கிய மனைவி

புவனேஸ்வர்: ஒடிசாவில் நடிகருடன் காருக்குள் இருந்த நடிகை பிரக்ருதி மிஸ்ராவின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கிய நடிகரின் மனைவி மீது போலீசார் வழக்குபதிந்துள்ளனர். ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் நகரில் ஒடியா நடிகர் பாபுசன் மொகந்தி, நடிகை பிரக்ருதி மிஸ்ராவுடன் காரில் இருந்தார். அப்போது அந்த கார் நின்றிருந்த இடத்துக்கு வந்த பாபுசன் மொகந்தியின் மனைவி த்ருபதி, காருக்குள் இருந்த பிரக்ருதி மிஸ்ராவை வெளியே இழுத்துபோட்டு தாக்கினார். அவரது பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற பிரக்ருதி மிஸ்ராவின் தலைமுடியை த்ருபதி இழுக்க முயன்றாள்.இருந்தும் அவரது பிடியில் இருந்து தப்பித்து, அருகில் நின்றிருந்த ஆட்டோ ரிக்ஷாவில் பிரக்ருதி மிஸ்ரா ஏற முயன்றார். அப்போதும் விடாமல் துரத்திய த்ருபதி, அவரை அங்கிருந்து விரட்டினார். அப்போது த்ருபதி கூறுகையில், ‘என் குடும்பத்தை பிரக்ருதி மிஸ்ரா அழித்து விட்டார்’ என்றார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. தொடர்ந்து புவனேஸ்வர் நகரின் காரவேலா நகர் காவல் நிலையத்தில், நடிகை பிரக்ருதி மிஸ்ராவின் தாய் கிருஷ்ணப்ரியா மிஸ்ரா, தனது மகள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து புகார் அளித்தார். இவ்விவகாரம் தொடர்பாக த்ருபதி மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருவதாக புவனேஸ்வர் போலீஸ் டிசிபி பிரதீக் சிங் கூறினார்….

Related posts

சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது