Wednesday, July 3, 2024
Home » நடராஜரை இழிவுபடுத்தி வீடியோ யூடியூபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் : சிவனடியார்கள், பக்தர்கள், இந்து அமைப்பினர் பங்கேற்பு

நடராஜரை இழிவுபடுத்தி வீடியோ யூடியூபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் : சிவனடியார்கள், பக்தர்கள், இந்து அமைப்பினர் பங்கேற்பு

by kannappan

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலின் மூலவரான நடராஜரை இழிவுபடுத்தியும், கொச்சைப்படுத்தியும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு யூடியூப் சேனல் ஒன்றில் பதிவிடப்பட்டிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன. இதனால் இந்த பதிவு யூடியூப்பில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில் நடராஜரை இழிவுபடுத்தி யூடியூப்பில் பதிவு செய்த யூடியூபர் மைனர் விஜய் என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி சிதம்பரத்தில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  இதற்காக நேற்று காலை முதலே சிவனடியார்கள் நடராஜர் கோயிலில் குவிந்த வண்ணம் இருந்தனர். அப்போது அவர்கள் நடராஜரை தரிசனம் செய்து விட்டு, வாத்தியக் கருவிகளை முழங்கியபடி சிவ பாடல்களையும் பாடினர். பின்னர் மாலையில் சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் சிதம்பரம் போல்நாராயணன் தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.  திருக்கழுக்குன்றம் தாமோதரன் சுவாமிகள் உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையிலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் வந்தார். அவர் மேடையில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். இந்து அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள், தொண்டர்கள், சிவனடியார்கள், பக்தர்கள் பங்கேற்றனர். அப்போது அவர்கள் நடராஜரை இழிவுபடுத்திய யூடியூபரான மைனர் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டனர். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த சென்னை சிவலோக திருமடத்தின் மடாதிபதி தவத்திரு பாலகுரு அடிகள், சிவனடியார்கள் சிவபெருமானின் திருநடனத்தை புரிந்து கொள்ள முடியாத மைனர் விஜய் என்பவர் ஆபாசமாக காணொலி பதிவிட்டிருக்கிறார். அவர் மட்டுமல்ல. அவரைப் போன்ற எண்ணம் கொண்டவர்களுக்காகத்தான் இன்று இந்த போராட்டம். இங்கு நமக்கு நீதி கிடைக்கும். அதுவரை போராடுவோம் என்றார். சிவனடியார்கள் போராட்டத்தையொட்டி விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், கடலூர் எஸ்பி சக்திகணேசன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். …

You may also like

Leave a Comment

sixteen − 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi