இந்நிலையில் சமீபகாலமாக அரபு அலிக்கு, மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மதியம் அரபு அலி வீட்டிற்கு வந்தபோது ஜாஸ்மின் செல்போனில் பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. கணவரை பார்த்ததும் செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார். இதுகுறித்து அரபு அலி விசாரித்துள்ளார். தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அரபு அலி, வீட்டில் இருந்த கறி வெட்ட பயன்படுத்தும் கத்தியால் மனைவியின் தலை, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினார். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜாஸ்மினை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரபு அலியை தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.