நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்: கத்தியால் குத்தி மனைவி கொலை: போலீசில் கணவன் சரண்

துரைப்பாக்கம்: துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (60). தள்ளுவண்டியில் கூழ் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி கஸ்தூரி (50), அதே பகுதியில் வீட்டு வேலைக்கு சென்று வந்தார். தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்கள் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.  இந்நிலையில், மனைவி நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதால், ஆறுமுகம் அடிக்கடி அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், இனிமேல் வேலைக்கு செல்ல வேண்டாம், என மனைவியை கண்டித்துள்ளார். இதனால், கஸ்தூரி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். ஆனாலும், மனைவி மீது சந்தேகப்பட்ட ஆறுமுகம், அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று மாலை கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த ஆறுமுகம் அங்கிருந்த உருட்டுக் கட்டையை எடுத்து வந்து, தனது மனைவியை சரமாரியாக தலை மற்றும் வயிற்றில் அடித்து உதைத்துள்ளார். படுகாயமடைந்த அவர் அலறி துடித்தார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத ஆறுமுகம், சமையல் அறைக்கு சென்று, அங்கிருந்த கத்தியை எடுத்து வந்து, மனைவியை சரமாரியாக குத்தினார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த கஸ்தூரி, சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர், ஆறுமுகம் ரத்தம் படிந்த கத்தியுடன் கண்ணகி நகர் காவல் நிலையத்திற்கு சென்று, மனைவியை கொன்று விட்டதாக போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று  கஸ்தூரி சடலத்தை மீட்டு,  பிரேத பரிசோதனைக்காக ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்து, வருகின்றனர்….

Related posts

வீட்டு வேலைக்காக சேர்ந்து குமரி டாக்டரின் மகனை மயக்கி 50 பவுன் நகையை சுருட்டி ரகசிய குடும்பம் நடத்திய இளம்பெண்: 5 பேரை திருமணம் செய்தது அம்பலம்

நாகை அரசு காப்பகத்தில் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை

சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி மதிப்பிலான கன்டெய்னர் திருட்டு