நசரத்பேட்டை ஓட்டல் அறையில் கேரள வாலிபர் மர்மச்சாவு: உடன் தங்கிய பெண்ணுக்கு வலை

பூந்தமல்லி: கேரள மாநிலத்தை சேர்ந்த சாஜின் (40), கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலை விஷயமாக சென்னை வந்து, பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தார். நேற்று முன்தினம் அறைக்குள் சென்ற இவர் நேற்று நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள் கதவை தட்டியும் திறக்காததால் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், நசரத்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ஓட்டல் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வாயில் நுரை தள்ளியபடி நிர்வாண நிலையில் சாஜின் இறந்து கிடந்தார்.  போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், கடைசியாக அவரது அறைக்கு ஒரு பெண் வந்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, அந்த பெண் யார், சாஜின் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என தீவிரமாக விசாரிக்கின்றனர்….

Related posts

மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

குடியிருப்பில் நள்ளிரவு தீவிபத்து உடல் கருகி 2 குழந்தைகள் பலி: ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு சிகிச்சை

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை