நகை, பணம் திருட்டு

சேலம், ஜன.24: சேலம் மெய்யனூர் வடக்கு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சங்கர் (எ) சங்கர்கணேஷ் (46). கூலித்தொழிலாளியான இவரது மனைவி கடந்தாண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 2 மகன்கள் உள்ளனர். அவரது மனைவியின் தங்கதாலி, தங்க நாணயம், ₹16,500 ஆகியவை பீரோவில் இருந்தது. பீரோவை உடைத்த மர்மநபர்கள், அங்கிருந்த நகை, பணத்தை திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் பள்ளப்பட்டி போலீசில் சங்கர் புகார் செய்தார். விசாரணை நடத்திய போலீசார், நேற்றுமுன்தினம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை