பெரம்பூர்: கொடுங்கையூரில் திருடனை கைது செய்த போலீசார், அவனிடம் இருந்து 8 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். சென்னை கொடுங்கையூர் நடராஜன் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (39). இவர் போர்வெல் தொழில் செய்கிறார். இவரது தங்கை அருணா (32). உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக கடந்த 23ம் தேதி பீரோவில் இருந்த நகைகளை எடுத்து அணிந்துகொண்டு சென்றார். பின்னர் அனைத்து நகைகளையும் பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டி வைத்துள்ளார். இதன்பிறகு அன்றைய தினம் மாலையில், பீரோவை ஏதேச்சையாக திறந்துபார்த்தபோது அதில் வைத்திருந்த நகைகள் காணாமல்போனதால் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி ஆனந்தன் கொடுத்த புகாரின்படி, கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், கொடுங்கையூர் சீனிவாச பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த மணிமாறன் (28) என்பவரை போலீசார் கைது செய்தபோது ஆனந்தன் வீட்டில் நகைகள் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரிடம் இருந்து 8 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கொடுங்கையூர் நீதிமன்றத்தில் மணிமாறனை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….
நகை திருடன் சிக்கினான்: 8 சவரன் பறிமுதல்
previous post