சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் தங்களுடைய வாக்குகளை முதல்நபராக சென்று பதிவு செய்தனர்.அதன்படி சென்னை 141-வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன், சேப்பாக்கம் தொகுதி 114வது வார்டு திமுக வேட்பாளர் மதன்மோகன், 163 -வார்டு வேட்பாளர் பூங்கொடி ஜெகதீஸ்வரன், 167- வார்டு திமுக வேட்பாளர் துர்காதேவி நடராஜன், சென்னை 170-வது வார்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் முத்தழகன், சென்னை 6-வது வார்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் எம்.சாமுவேல் திரவியம், 165வது வார்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத், 83-வது வார்டில் உஷா நாகராஜன், 7வது வார்டில் சுயேட்சையாக போட்டியிடும் ஆதி குருசாமி, 33-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் குணசுந்தரி குட்டி மோகன், சென்னை மாநகராட்சி 92-வது வார்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஜி.முரளி, 182வது வார்டில் திமுக வேட்பாளர் ஆறுமுகம், பெருங்குடி 186-வது வார்டில் போட்டியிடும் ஜெ.கே.மணிகண்டன், பெரம்பூர் சட்டமன்றத்திற்குட்பட்ட 37-வது வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் டில்லிபாபு, தாம்பரம் மாநகராட்சி 49 -வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் நகரமன்ற துணை தலைவர் காமராஜ், சென்னை, ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் 38-வது வார்டில் போட்டியிடும் நேதாஜி யு.கணேசன், தாம்பரம் மாநகராட்சி 43வது வார்டு அதிமுக வேட்பாளர் மோகன், ஆகிய வேட்பாளர்கள் முதல் நபராக சென்று வாக்களித்தனர். மேலும் செங்கல்பட்டு நகராட்சி 2-வார்டு திமுக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி, காஞ்சிபுரம் மாநகராட்சி 11-வது வார்டு திமுக வேட்பாளர் சண்முக சுந்தரம், 37-வது வார்டு மதிமுக வேட்பாளர் மகேஷ், 18-வது வார்டு திமுக வேட்பாளர் மல்லிகா ராமகிருஷ்ணன், 48வது வார்டு திமுக வேட்பாளர் கார்த்திக், 32-வது வார்டு திமுக வேட்பாளர் காந்தி சீனிவாசன், 44-வது வார்டு திமுக வேட்பாளர் விஸ்வநாதன், பெரும்புதூர் பேரூராட்சி 11-வது வார்டு திமுக வேட்பாளர் சகிலா குமார், 2-வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் நாராயணன், செங்கல்பட்டு நகராட்சி 7-வது வார்டு திமுக வேட்பாளர் மணிகண்டன், மறைமலைநகர் நகராட்சி 12-வது வார்டு திமுக வேட்பாளர் சண்முகம், தாம்பரம் மாநகராட்சி 59 -வார்டு திமுக வேட்பாளர் ராஜேஸ்விரி சங்கர், மதுராந்தகம் நகராட்சி 17-வது வார்டு திமுக வேட்பாளர் மலர்விழி குமார், திருவள்ளூர் நகராட்சி 17-வது வார்டு திமுக வேட்பாளர் ராஜேஸ்குமார், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி 3-வது வார்டு திமுக வேட்பாளர் சீனிவாசன் வாக்களித்தனர். …