சென்னை: தமிழகத்தில் பேரூராட்சிகளில் வாக்குப்பதிவுகள் விறுவிறுப்பாகவும் அமைதியான முறையிலும் நடைபெற்று வருகிறது. காலை 11 மணி வரை பெரும்பாலான பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு 30 சதவீதத்தை தாண்டியுள்ளது. கரூர் மாவட்டம் பழைய ஜெயன்கொண்ட சோழபுரம் பேரூராட்சியில் காலை 11 மணி வரை 53% வாக்குகள் பதிவாகியுள்ளன.மேலும் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் 50% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் திருவண்ணாமலை மற்றும் நாமக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் நகராட்சிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாநகராட்சிகளில் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி வரை சென்னையில் சுமார் 10% வாக்குகள் மட்டுமே பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் இனிமேல்தான் வாக்குப்பதிவு அதிகரிக்கும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார். சென்னை மட்டுமின்றி வேறு சில மாநகராட்சிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்று வருகிறது.
…