Monday, July 8, 2024
Home » நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டும்: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் புகார் மனு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டும்: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் புகார் மனு

by kannappan

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் நேற்று புகார் மனு ஒன்று அளித்துள்ளார். பின்னர் நிருபர்களிடம் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேசியதாவது: சென்னை உட்பட பல்வேறு இடங்களில் பணப்பட்டுவாடா செய்த நபர்கள் கையும் களவுமாக பிடிபட்ட பின்னரும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இதுகுறித்து நாங்கள் பல முறை மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஒவ்வொரு வார்டிலும் 5 வாக்குசாவடி மையங்களை குண்டர்கள் கைப்பற்ற உள்ளதாக எங்களுக்கு தகவல்கள் வந்துள்ளது. எனவே ஒவ்வொரு வாக்குசாவடிகளிலும் வழக்கத்தை விட கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். வாக்குசாவடி மையத்தின் 100 மீட்டர் தொலைவுக்கு வாக்காளர்கள் முகர்வர்கள் தவிர மற்றவர்களை உள்ளே அனுமதிக்க கூடாது என்று போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்துள்ளேன். எங்கள் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் பேசினார். …

You may also like

Leave a Comment

eight − seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi