Sunday, June 30, 2024
Home » நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு சென்னையில் எங்கெல்லாம் வேட்புமனு தாக்கல் செய்யலாம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு சென்னையில் எங்கெல்லாம் வேட்புமனு தாக்கல் செய்யலாம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

by kannappan

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, சென்னையில் எங்கெல்லாம் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19ம் தேதி ஒரேகட்டமாக  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல்  நேற்று தொடங்கியது. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் போட்டியிட தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்களை பெற 37 உதவி தேர்தல் அதிகாரிகள்  நியமிக்கப்பட்டுள்ளனர். 15 மண்டல அலுவலகங்களில் வேட்புமனுக்கள் தாக்கல்  செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான  ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் வேட்புமனு தாக்கல், பறக்கும் படைகள் நியமனம், தேர்தல் தொடர்பாக புகார்கள்  அளித்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஒரு மண்டலத்திற்கு சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் 45 பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டிய இடங்கள்  தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி திருவொற்றியூர் மண்டல அலுவலகம் 1 முதல் 14 வார்டுகள், மணலி மண்டல அலுவலகம் 15 முதல் 22 வார்டுகள், மாதவரம் மண்டல அலுவலகம் 23 முதல் 33 வார்டுகள், தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் 34 முதல் 47 வார்டுகள், ராயபுரம் மண்டல அலுவலகம் 49 முதல் 63 வார்டுகள், திரு.வி.க.நகர் மண்டல அலுவலகம் 64 முதல் 78 வார்டுகள், அம்பத்தூர் மண்டல அலுவலகம் 79 முதல் 93 வார்டுகள், அண்ணா நகர் மண்டல அலுவலகம் 94 முதல் 108 வார்டுகள், தேனாம்பேட்டை மண்டல அலுவலகம் 109 முதல் 126 வார்டுகள், கோடம்பாக்கம் மண்டல அலுவலகம் 127 முதல் 142  வார்டுகள், வளசரவாக்கம் மண்டல அலுவலகம் 143 முதல் 155 வார்டுகள், ஆலந்தூர் மண்டல அலுவலகம் 156 முதல் 167 வார்டுகள், அடையாறு மண்டல அலுவலகம் 168  முதல் 180 வார்டுகள், பெருங்குடி மண்டல அலுவலகம் 181 முதல் 191 வார்டுகள், சோழிங்கநல்லூர் மண்டல அலுவலகம் 192 முதல் 200 வார்டுகள் ஆகும்.மேலும் சென்னை மாநகராட்சியின் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக ரூ.90 ஆயிரம் வரை செலவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க 24 மணி நேரமும்  செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 1800 425 7012 என்ற எண் மூலமும், http://election.chennaicorporation.gov.in/gcculb22/complaints/ என்ற இணையதளமும் மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்….

You may also like

Leave a Comment

3 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi