நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை

திருச்செங்கோடு, நவ.9: திருச்செங்கோடு நகராட்சியில் நிரந்தர தூய்மை பணியாளர்களாக பணியாற்றும் 105 பேருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி, நகராட்சி வளாகத்தில் நேற்று நடந்தது. பணியாளர்களுக்கு ஆடைகள், சீருடை மற்றும் அதற்கான தையல் கூலி ஆகியவை வழங்கப்பட்டது. நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, கமிஷனர் சேகர், நகர்நல அலுவலர் வெங்கடாசலம் ஆகியோர் புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினர். நிகழ்ச்சியில், நகர்மன்ற உறுப்பினர்கள் தாமரைச்செல்வி மணிகண்டன், சினேகா ஹரிகரன், செல்லம்மாள் தேவராசன், செல்வி ராஜவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை