Saturday, July 6, 2024
Home » தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!

தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!

by kannappan

நோனி: மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் 42 பேரில் 27 பேர் ராணுவத்தினர் என தெரியவந்துள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நோனி மாவட்டத்தில் துபுல் என்ற இடத்தில் ரயில்வே கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு அப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களும் அவர்களின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்த ராணுவ வீரர்களும் சிக்கினர். இதுகுறித்த தகவலின்பேரில் ராணுவத்தினர் உள்ளிட்ட மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 42 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களில் 27 பேர் ராணுவ வீரர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

You may also like

Leave a Comment

two × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi