தோட்டத்தில் விவசாயி மர்மச்சாவு

மதுரை, ஆக. 11: மதுரை அருகே அங்காடிமங்கலம் திருமான்பத்தியை சேர்ந்தவர் ராமலிங்கம் (51). இவர் சம்பவத்தன்று தோட்டத்திற்கு சென்றார். திரும்பி வரவில்லை. சந்தேகமடைந்த மனைவி ராக்கு, தோட்டத்திற்கு சென்று பார்த்த போது ராமலிங்கம் இறந்த நிலையில் கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த சிலைமான் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை