தொழிலாளி வீட்டில் திருடியவர் கைது

தர்மபுரி, ஜூலை 9: தர்மபுரி மாவட்டம், பொம்மிடி பகுதியைச் சேர்ந்தவர் தனபால், தொழிலாளி. இவரது மனைவி தாமரைசெல்வி. இவர்களுடன் மகன், மருமகள் ஒன்றாக வசித்து வருகின்றனர். கடந்த 1ம் தேதி வீட்டை பூட்டி விட்டு அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர், பீரோவில் வைத்திருந்த அரை பவுன் தங்க தாலி, செயின், 16 கிராம் வெள்ளி மெட்டி ஆகியவற்றை திருடிச்சென்றார். இதுகுறித்து தாமரை செல்வி பொம்மிடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், அதே பகுதியை சேர்ந்த பாரதி மகன் தினேஷ்குமார் (30) என்பவர், தனபால் வீட்டில் திருடியது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை