தொழிலாளி மாயம்

கிருஷ்ணகிரி, செப்.12: கிருஷ்ணகிரி மகராஜகடை அருகேயுள்ள எலுமிச்சங்கிரி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (49). கூலி தொழிலாளியான இவர், கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர், அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், நேற்று முன்தினம் அவரது மனைவி கவிதா, மகராஜகடை போலீசில் புகாரளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி