தொழிலாளி மாயம்

கிருஷ்ணகிரி, செப்.17: கிருஷ்ணகிரி அடுத்த மோரமடுகு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் ராமன் (32), கூலித்தொழிலாளி. கடந்த 6ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற ராமன், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி செல்வராஜ் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ராஜபாளையம் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

முட்புதர்களாக காட்சியளிக்கும் அர்ச்சுனா ஆற்றை தூர்வார வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

வெம்பக்கோட்டை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்