தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்யாறு அருகே

செய்யாறு,ஆக. 11: செய்யாறு அருகே ஷூ கம்பெனி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா பெரிய ஏழாச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கரன்(30), செய்யாறு சிப்காட்டில் உள்ள ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு நிர்மலா என்ற மனைவியும், 1 மகன், 1 மகள் உள்ளனர். இந்நிலையில் பாஸ்கரன் கடந்த சில ஆண்டுகளாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் கடந்த 8ம்தேதி மீண்டும் வயிற்று வலியால் அவதிப்பட்ட பாஸ்கரன் தூக்கிட்டு தொங்கியுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பாஸ்கரன் பலியானார். இதுகுறித்து புகாரின்பேரில் தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்