தொழிலாளி தற்கொலை

சிவகாசி, ஜன.23: சிவகாசி பி.கே.எஸ்.ரோடு பகுதியைச் சேர்ந்தவர் துரைச்சாமி மகன் ஆறுமுகசாமி(48). இவர் சிவகாசியில் நெகிழிப்பை தயாரிக்கும் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் விரக்தி அடைந்த அவர், நேற்று சிவகாசி அருகே அய்யம்பட்டி அருகே சென்னையில் இருந்து செங்கோட்டை சென்று கொண்டிருந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. இது குறித்து திருவில்லிபுத்துார் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை