தொழிலாளி தற்கொலை

ஈரோடு, ஜன. 12:ஈரோடு பெரியசேமூர், பசுமைநகரை சேர்ந்தவர் ரமேஷ் (44). கூலித்தொழிலாளியான இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் ரமேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் மனைவி மற்றும் குழந்தைகளை கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டனர். தனியாக வசித்து வந்த ரமேஷ் குடும்பத்தினர் தன்னை சேர்த்துக்கொள்ளவில்லை என்ற மனக்கவலையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் வீட்டின் விட்டத்தில் நைலான் கயிற்றால் தூக்கிட்டு ரமேஷ் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஈரோடு வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு