தொழிலாளியை தாக்கியவர் கைது

 

தேன்கனிக்கோட்டை, செப்.11: தேன்கனிக்கோட்டை தாலுகா அகலக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (40), கூலித்தொழிலாளி. இவர் வளர்த்து வரும் மாடு, பக்கத்து வீட்டில் வசிக்கும் லட்சுமி என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் பயிர்களை மேய்ந்தது. இது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த முன்விரோதம் காரணமாக, லட்சுமியின் பேரன்களான ஓசூர் அவ்வையார் நகரை சேர்ந்த அபிேஷக் (21), அவரது தம்பி விஜயகுமார் (19), மேலும் இருவர் சேர்ந்து நேற்று முன்தினம் வெங்கடேஷ் வீட்டிற்குள் நுழைந்து, அவரை கட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்தனர்.

இதில் காயமடைந்த வெங்கடேஷ், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக தளி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து அபிேஷக்கை போலீசார் கைது செய்தனர். விஜயகுமார் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை