தொழிலாளர் நல சங்க ஆண்டு விழா

திருச்செங்கோடு, மே 4: திருச்செங்கோடு அனைத்து மோட்டார் ஒர்க் ஷாப் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில், 17ம் ஆண்டு விழா நேற்று தலைவர் பொன் சக்தி தலைமையில் நடந்தது. செயலாளர் அப்புராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக பி.ஆர்.டி. நிறுவனங்களின் தலைவர் தங்கராஜ், லாரி பாடி பில்டிங் அசோசியேசன் தலைவர் வெள்ளியங்கிரி, பிஆர்டி பரந்தாமன், செந்தில் மோட்டார் செந்தில்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பொருளாளர் முருகேசன், துணைத்தலைவர் சக்திவேல், முருகன், காளிஸ், கணேசன் ஆகியோர் செய்திருந்தனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு