சென்னை: கோபாலபுரம் வடக்கு 2வது தெருவை சேர்ந்தவர் தனஞ்செயன். தொழிலதிபரான இவர், தனது வீட்டில் கடந்த மாதம் 64.5 சவரன் நகைகள் மாயமானது. இதுகுறித்த புகாரின் பேரில் ராயப்பேட்டை போலீசார் விசாரணையில், வீட்டில் வேலை செய்து வந்த நந்தினி (29), கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலையில் இருந்து நின்றது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், கடந்த 2019ம் ஆண்டு முதல் தொழிலதிபர் வீட்டில் வேலை செய்து வந்ததும், அப்போது நந்தினி கணவர் கார்த்திக்கின் மாமா கலியபெருமாள் கொடுத்த யோசனைப்படி சிறுக சிறுக தொழிலதிபர் வீட்டில் இருந்து 64.5 சவரன் நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள விலாங்கடி கிராமத்தை சேர்ந்த நந்தினி மற்றும் த கலியபெருமாளை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 64.5 சவரன் நகைகள் மீட்கப்பட்டது….