தொழிலதிபரை மணந்த சில நாட்களில் பினாயில் குடித்து நடிகை தற்கொலை முயற்சி

கோலார்; தொழிலதிபரை மணந்த சில நாட்களில் கன்னட நடிகை ஒருவர் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல சின்னத்திரை கன்னட நடிகை சைத்ரா கொட்டுரு, கடந்த சில நாட்களுக்கு முன்பு மண்டியாவைச் சேர்ந்த தொழிலதிபர் நாகார்ஜுனாவை  திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவரது வீட்டில் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அதையறிந்த குடும்பத்தினர் அவரை  மீட்டு  மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். இவ்விவகாரம்  தொடர்பாக போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். நடிகை தற்கொலைக்கு முயன்ற விவகாரம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது. சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ‘தொழிலதிபர் நாகார்ஜுனாவும், நடிகை சைத்ராவும் திருமணம் ெசய்து கொள்ளும் முடிவானது, நாகார்ஜூனா  குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. ஆனால், கடந்த மார்ச் 28ம் தேதி, நாகார்ஜுனாவுக்கும் சைத்ராவுக்கும் ஒரு கோயிலில் திருமணம் நடந்த  புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இவர்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பையத்தராயனபுர கணபதி கோயிலில் திருமணம் செய்துகொண்ட விஷயம்  நாகார்ஜூனா குடும்பத்தினருக்கு தெரியவந்ததால், அவர்கள் கோலார் போலீசில் புகார் அளித்தனர். இருதரப்பையும் அழைத்து விசாரணை நடத்தி, நாகார்ஜூனா- சைத்ரா தம்பதியை ஒன்றாக அனுப்பி வைத்தோம். ஆனால், நாகார்ஜூனாவின்  குடும்பத்தினர் தம்பதிகளை வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்துள்ளனர். மேலும், இருவரின் திருமணம் செல்லாது என்றும், நாகார்ஜூனாவை  கட்டாயப்படுத்தி திருமணத்தை நடத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் சைத்ராவுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். ஒருகட்டத்தில் நாகார்ஜுனாவும் சைத்ரா தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து  கொண்டதாக தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த சைத்ரா, தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவ்விவகாரம் தொடர் பாக விசாரணை நடைபெற்று  வருகிறது’ என்றனர்….

Related posts

121 பேரை பலி கொண்ட விபத்து ஹத்ராஸில் ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

கேரளாவில் பரவும் காய்ச்சல் 310 பன்றிகளை கொல்ல முடிவு

கேதார்நாத்தில் பெண் பக்தருக்கு பாலியல் தொல்லை; 2 எஸ்ஐ சஸ்பெண்ட்