கடலூர், ஜூலை 5: கடலூர் முதுநகர் அருகே உள்ள சிப்காட் வளாகத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலத்திலிருந்து ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு உள்ள ஒரு தனியார் மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் உள்ள ஒரு பாய்லரில் இருந்து புகை கிளம்பி உள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தொழிற்சாலையில் இருந்த ஊழியர்கள் தீயணைப்பு உபகரணங்கள் மூலம் அந்தப் புகையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து முதுநகர் போலீசார் நடத்திய விசாரணையில், பாய்லரில் ரசாயன கசிவு ஏற்பட்டதால் புகைமூட்டம் உண்டானது தெரியவந்தது.
தொழிற்சாலையில் ரசாயன கசிவு
previous post