தொடர் மழையால் மானாவாரி நிலங்களில் வெள்ளைச் சோளம் அமோக விளைச்சல்

பெரியகுளம் :  பெரியகுளம் பகுதியில் தொடர் மழையால், வெள்ளைச் சோளம் அமோகமாக விளைந்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் மானாவாரி நிலங்கள் அதிகமாக உள்ளன. கடந்தாண்டு தென்மேற்கு பருவ மழை மற்றும் வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்ததால் மானாவாரி நிலங்களில் வெள்ளைச் சோளம், எள், பச்சைப்பயறு, தட்டான் பயறு, கேப்பை ஆகியவற்றை விவசாயிகள் அதிகமாக பயிரிட்டனர். இந்நிலையில், 90 நாள் பயிரான வெள்ளைச் சோளத்திற்கு தொடர் மழை கிடைத்ததால் நல்ல விளைந்துள்ளது. அறுவடை செய்ய 20 நாட்கள் உள்ள நிலையில், நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்….

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு