தமிழகம் தொடர் மழையால் கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி நிறுத்தம் kannappanNovember 12, 2021, 8:54 pm027 views கொடைக்கானல்: தொடர் மழையால் கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தின் பிரபல சுற்றுலாத்தலமான கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று சற்று மழையளவு குறைந்தது. ஆனால் சூறைக்காற்று வீசியதோடு, சாரல்மழை தொடர்ந்து பெய்தது. தொடர் மழை காரணமாக கொடைக்கானலில் கடுங்குளிர் நிலவி வருகிறது. இதனால், மோயர் பாயின்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண் பாறை, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா இடங்களிலும் சுற்றுலாப்பயணிகள் குறைந்தே காணப்பட்டனர். தொடர் மழை காரணமாக கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி நேற்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக படகு குழாம் நிர்வாகிகள் தெரிவித்தனர். …