தொடர்ச்சியாக 5 நாட்களில் மட்டும் கிராமுக்கு 80, சவரனுக்கு 640 அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் சவரன் மீண்டும் 38 ஆயிரத்தை தொட்டுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. வரும் நாட்களில் பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளும், திருமணம் உள்ளிட்ட விஷேச தினங்களும் அதிக அளவில் வருகிறது. இந்த நேரத்தில் விலை உயர்வு நகை வாங்குவோருக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளதாக நகை வாங்குவோர் கூறி வருகின்றனர்….