தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

 

சத்தியமங்கலம்,மார்ச்12: சத்தியமங்கலம் காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 23-வது ஆண்டு விழா “நைரா-2024“ நடைபெற்றது.கல்லூரியின் நிறுவனத் தலைவர் பெருமாள்சாமி தலைமை வகித்தார். கல்லூரியின் செயலர் அருந்ததி, இணை செயலர் மலர்செல்வி முன்னிலை வகித்தனர்.கல்லூரியின் முதல்வர் குருமூர்த்தி வரவேற்றார்.

சத்தியமங்கலம் பழனிசாமி ட்ராமா கேர் மருத்துவமனை மருத்துவர் செந்தில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில்: மாணவர்கள் எங்கு படித்தாலும் அவர்களது சொந்த ஊரில் சேவை செய்ய வேண்டும் என்றும் ஆசிரியர்களை பின்பற்றி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் கூறினார் . பின்பு கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ -மாணவியருக்கு பரிசு வழங்கினார்.

பல்கலைக்கழகத் தேர்வில் தங்க பதக்கம் மற்றும் தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற மாணவ-மாணவியருக்கு கல்லூரியின் நிறுவன தலைவர் பெருமாள்சாமி ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார்.விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் பிரகாஷ் மற்றும் ஹேம்நாத் செய்திருந்தனர். கல்லூரியின் அனைத்து துறை தலைவர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி