தொகுதி வளர்ச்சிக்கு பாடுபடுவேன்: கே.பி.சங்கர் வாக்குறுதி

திருவொற்றியூர்: திருவொற்றியூர் தொகுதி திமுக வேட்பாளர் கே.பி.சங்கர் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, நேற்று எர்ணாவூர் பஜனை கோயில் தெரு, டிகேஎஸ் நகர் போன்ற பகுதிகளில் திறந்த  ஜீப்பில் வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். வழிநெடுகிலும் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது, கே.பி.சங்கர் பேசுகையில், ‘திமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி கலைஞரிடமும், தளபதியிடமும் முன்வைத்த கோரிக்கை தான் இன்று திருவொற்றியூரில் ஓடிக்கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் திட்டம். அதேபோல்,  மின் பற்றாக்குறையை போக்கவும், வேலை வாய்ப்பை உருவாக்கவும் கலைஞர் கொண்டு வந்த திட்டம் தான் வடசென்னை அனல் மின் நிலையம். இதன்மூலம் தற்போது சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன. ஆனால், அதிமுக ஆட்சியில் எந்த திட்டமும் புதிதாக கொண்டுவராமல் தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுவதாக எடப்பாடி கூறிக் கொண்டிருக்கிறார்.  வரப்போகிற திமுக ஆட்சியில் திருவொற்றியூருக்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதிலும் பல பயனுள்ள திட்டங்களை தளபதி கொண்டு வருவார். எனவே, தொகுதி வளர்ச்சிக்கு பாடுபட என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்,’ என்றார்.  பிரசாரத்தின்போது திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்….

Related posts

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்

டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சொல்லிட்டாங்க…