தை அமாவாசையை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை

காரிமங்கலம், பிப்.10: தை அமாவாசையை முன்னிட்டு காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி ஸ்ரீ வீரதீர விவேக ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு வடை மாலை, வெற்றிலை மாலை சாற்றுதல் ஆகியவை நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் சஞ்சீவிராயன் மலைக்கோயில், பாலக்கோடு ரோடு ஏரிக்கரை ஆஞ்சநேயர் கோயில், மணிக்கட்டியூர் ஆஞ்சநேயர் கோயில், காரிமங்கலம் அக்ரஹாரம் ராமர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் தை அமாவாசையை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை