தேவாரத்தில் மனைவி இறந்த சோகத்தில் கணவர் தற்கொலை

 

தேவாரம், ஜூலை 3: தேவாரத்தில் மனைவி இறந்த சோகத்தில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். தேவாரம் நாடார் வடக்கு தெருவை சேர்ந்தவர் கருப்பையா தாஸ் (68). இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கருப்பையா தாஸின் மனைவி கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு இறந்துவிட்டார். மனைவி இறந்த துக்கத்தில் கருப்பையா தாஸ் சோகத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் கருப்பையா தாஸ் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், விஷம் குடித்துள்ளார். தகவலறிந்த உறவினர்கள் உடனடியாக இவரை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பையா தாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்