தேவர்குளம் அருகே வாலிபரை தாக்கியவர் கைது

நெல்லை, செப். 21: தேவர்குளம் அருகேயுள்ள ஆயாள்பட்டி, மேலத் தெருவை சேர்ந்தவர் வெற்றி சிவா (23). இவருக்கும், மடத்துப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த பெரியசாமி (35) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் வெற்றிசிவா மடத்துப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த பெரியசாமி மற்றும் இருவர் சேர்ந்து அவரை வழிமறித்து அவதூறாக பேசி தாக்கி உள்ளனர். இதுகுறித்து வெற்றிசிவா தேவர்குளம் போலீசார் புகார் அளித்தார். எஸ்ஐ ஆபிரகாம் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி பெரியசாமியை கைது செய்தனர். அவரது நண்பர்கள் இருவரை தேடி வருகின்றனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி