தேவதானப்பட்டி அருகே டேங்கர் லாரி மோதி விபத்து: 2 கார்கள் சேதம்; 2 பேர் படுகாயம்

 

தேவதானப்பட்டி, ஆக.27: தேவதானப்பட்டி அருகே டேங்கர் லாரி மோதியதில் இரண்டு கார்கள் சேதமடைந்தன. மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். கம்பம் மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலு(62). இவர் தனது குடும்பத்துடன் காரில் கோயிலுக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது தேவதானப்பட்டி காட்ரோடு செக் போஸ்ட் அருகே வரும்போது பின்னால் வந்த டேங்கர் லாரி, இவரது கார் மீது மோதியது. இதனால் அந்த கார் முன்னால் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இரண்டு கார்களும் சேதமடைந்தன. இந்த விபத்தில், பாலு மற்றும் அவரது மனைவி இந்திராகாந்தி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பான புகாரின் பேரில், தேவதானப்பட்டி போலீசார், திருச்சியைச் சேர்ந்த டேங்கர் லாரி டிரைவர் சேகர்(26) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி