கவுகாத்தி: அசாமில் அரசு தேர்வில் முறைகேடு நடப்பதை தடுக்க, 25 மாவட்டங்களில் 4 மணி நேரம் மொபைல் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டது. அசாம் மாநிலத்தில் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா தலைமையிலான பாஜ ஆட்சி நடக்கிறது. அங்கு சுமார் 30,000 காலி அரசு பணியிடங்களை நிரப்ப நேற்று தேர்வு நடந்தது. 14 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதில், முறைகேடுகளை தவிர்க்க அம்மாநில அரசு புதிய உத்தியை கையாண்டது. தேர்வு நடக்கும் சமயத்தில், 25 மாவட்டங்களில் 4 மணிநேரம் மொபைல் இணைய சேவையை முடக்கி வைத்தது. மேலும், பல்வேறு தேர்வு மையங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தேர்வு அறைக்குள் தேர்வர்கள் மட்டுமல்லாது, கண்காணிப்பாளர்களும் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களைக் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டது….