பெரம்பலூர் : தினகரன் செய்தி எதிரொலி. தே ர்தல் நடத்தை விதிகளை மீறி, மூடியிருந்த எம்ஜிஆர் சிலையைத் திறந்து மா லையிட்ட சம்பவம். தாசில் தார் உத்தரவால் மீண்டும் மூடப்பட்டது.பெரம்பலூர் -அரியலூர் சாலையில் கவுல்பாளையம் பிரிவு ரோட்டில் எம்ஜிஆர் சிலை உள்ளது. சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலை வெள்ளைத்துணி கொண்டு மூடப்பட்டது. இந்நிலையில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் முக்கிய கட்சியின் வேட்பாளர் நேற்றுமுன்தினம் அப்பகுதியில் பிரசாரத்தையொட்டி எம்ஜிஆர் சிலையில் மூடியிருந்த துணியை அகற்றிவிட்டு மாலை அணிவிக்க கட்சியினர் வழிசெய்துள்ளனர். பின்னர் வாக்கு சேகரிப்புக்கு முன்னதாக தேர்தல் நடத்தை விதிகளை மீறி எம்ஜிஆர் சிலைக்கு மாலையும் அணிவிக்கப்பட்டது.இதுகுறித்து நேற்று தினகரன் நாளிதழில் தேர்தல் விதிகளை மாலை அணி விக்கப்பட்ட எம்ஜிஆர் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. செய்தியைப் பார்த்தவுடன் பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் வெங்கடபிரியா உத்தரவின் பே ரில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான தாசில்தார் சின்னதுரை, வருவாய்த்துறை ஊழியர் களைக் கொண்டு கவுல்பாளையம் எம்ஜிஆர் சிலை யை மீண்டும் துணியால் மூடிப் பாதுகாக்க ஏற்பாடு செய்தார். செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு வாக்காளர்கள், பொதுமக்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனர்….