புதுக்கோட்டை, ஜூன் 8: மக்களவை தேர்தல் 2024”ன் தேர்தல் நடத்தைவிதிகள் முடிவடைந்துள்ளதால் வரும் 10ம்தேதி முதல் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் முதலான அனைத்து திட்டங்கள் தொடர்பான கூட்டங்களும் நடைபெறும். எனவே பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கலாம் என இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை கலெக்டர் மெர்சி ரம்யா, தெரிவித்துள்ளார்.