தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம்

செங்கல்பட்டு: தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கலெக்டர்  அலுவலகத்தில் நேற்று,  கலெக்டர் ஜான்லூயிஸ் முன்னிலையில், மாவட்ட தேர்தல் செலவின கண்காணிப்பு பார்வையாளர்கள் மணிஷ்குமார் செளடா, சிவப்பிரசாத், பியூஸ்கட்டியா, மாலதி ஆகியோர் தலைமையில் ஆலோசனை நடந்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில் சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர். செய்யூர் (தனி), மதுராந்தகம் (தனி) ஆகிய தொகுதிகள் உள்ளன. இங்கு மணிஷ்குமார் செளடா, சிவப்பிரசாத், பியூஸ் கட்டியா, மாலதி ஆகியோர் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். இந்திய தேர்தல் ஆணையத்தால், தேர்தலுக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. அதன்படி,  செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது….

Related posts

மக்களுடன் முதல்வர், காலை உணவுத் திட்டம் வரும் 11 மற்றும் 15ம் தேதிகளில் விரிவாக்கம்: எம்.பி, எம்எல்ஏக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு